டிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்
டெல்லி: டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் படிப்பறிவில்லாத பாமரர்கள், அவர்கள் வழிதெரியாமல் டெல்லிக்குள் சென்றுவிட்டனர் என விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நுழைவு வாயிலில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க குடியரசுத் தினவிழா அன்று மாபெரும் டிராக்டர் பேரணியை அமைதியாக நடத்த திட்டமிட்டார்கள்.
72 ஆவது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். அப்போது யாரோ சில விஷமிகளின் சதியால் பேரணியில் வன்முறையை தூண்டும் வகையில் சில காரியங்களை செய்ததால் போலீஸார் விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தினர்.

டெல்லி விவசாயிகள்
இந்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியின் 4 நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அடித்து தள்ளிவிட்டு நுழைந்தனர். அவர்கள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கு தேசியக் கொடியின் அருகே விவசாய சங்க கொடியையும் ஏற்றினர்.

டெல்லிக்கு எப்படி
இந்த பேரணியில் நடந்தது என்ன என்பது குறித்து பாரத் கிஷான் சங்க தலைவர் ராகேஷ் மிகவும் அழகாக விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் டிராக்டரை ஓட்டிச் சென்றவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள். அவர்களுக்கு டெல்லிக்கு எப்படி போக வேண்டும் என்பது கூட தெரியாது.

செங்கோட்டை
டெல்லிக்கு எப்படி போக வேண்டும் என்பதை அங்கிருந்த அதிகாரிகள், காவல்துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம்தான் கூறியது. இதன் பேரில் அவர்கள் டெல்லிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி விட்டார்கள். சிலர் செங்கோட்டைக்கு திசை திருப்பிவிடப்பட்டுவிட்டார்கள்.
|
பத்திரமாக வெளியே வந்த விவசாயிகள்
பின்னர் எப்படி வெளியே வர வேண்டும் என்பதை டெல்லி போலீஸார் வழிகாட்டியதன் பேரில் அவர்கள் திரும்பி வந்துவிட்டனர் என்றார். அதாவது வழித்தெரியாமல் போனார்கள், போலீஸார் கூறுவதை கேட்டு திரும்பி வந்துவிட்டார்கள், மற்றபடி வன்முறையில் இறங்கியது விவசாயிகள் இல்லை என்பது இவரது கூற்றிலிருந்து புரிகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications