Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு உயரும் சம்பளம்.. அதைவிடுங்க.. யாருக்கெல்லாம் "பென்ஷன்" கிடையாது தெரியுமா? அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்த பிறகு, இப்போது மறுபடியும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து ஒரு முக்கிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தின்கீழ் பல மாற்றங்களைக் கொண்டுவர ஏப்ரம் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

ஓய்வூதிய திட்டம்: இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலுமே அரசு ஊழியர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதில் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன.. பழைய பென்சன் திட்டத்தை அரசு ஊழியர்கள் வலியுறுத்துவதற்கான முக்கியக் காரணம் பணியில் இருக்கும் காலத்தில் அவர்களின் சம்பளத்தில் ஓய்வூதியத்திற்காக எவ்வித தொகையும் பிடித்தம் செய்யப்படாது... ஆனால் ஓய்வூதியக் காலத்தில் அவர்கள் சம்பளத்தில் 50% தொகை அவர்களுக்கு உத்தரவாத பென்சனாக கிடைக்கும்.

பென்ஷன்தாரர்கள்: அதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்படும். இதனால் ஓய்வூதியம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தின்கீழ் இப்போது, அரசு பணியிலிருக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10-14% வரை பிடித்தம் செய்யப்படும். ஆனால் ஓய்வு பெறும் காலத்தில் எந்தவொரு உத்தரவாத ஓய்வூதியத்தொகையும் கிடைக்காது..

big alert for Central government employees and major changes in gratuity and pension rule

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக உத்தரவாத ஓய்வூதிய திட்டம் (Guaranteed Pension Scheme) அமல்படுத்தப்படும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அந்தவகையில், புதிய பென்சன் திட்டத்தின்கீழ் 40% உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

கடும் எச்சரிக்கை: இதனிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்த பிறகு, மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் பெறும் ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும்..

ஆம்... பணியில் ஏதேனும் அலட்சியம் செய்தால், பணி ஓய்வு பெற்ற பிறகு, அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டி நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.. யார் யாருக்கெல்லாம் இந்த பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்பது குறித்தான அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

ஊழியர்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டையும் ஊழியர்கள்தான் வழங்க வேண்டும் என்றும், தலைமை பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறை தொடர்புடைய செயலர்கள் மற்றும் தணிக்கை மற்றும் கணக்கு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடும் உத்தரவு: மாற்றப்பட்ட இந்த விதிகள் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.. அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகள் குறித்த தகவல் கிடைத்தால், அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது...

தவறு செய்தால், ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படும் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையானது, அரசு ஊழியர்கள் தரப்பில் கலக்கத்தை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+