விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. நாடாளுமன்ற 3 குழுக்களிலிருந்து பாஜக கூட்டணி கட்சி எம்பி ராஜினாமா
டெல்லி: நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மூன்று நாடாளுமன்ற குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் ஹனுமான் பெனிவால். இவர் பாஜக கூட்டணி கட்சியான சவியோஆஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சியின் எம்.பியாகும்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ள ஹனுமான் பெனிவால், இந்த குழுவில் இடம் பெற்றபோது தான் எழுப்பிய பல பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் ஏமாற்றமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"பல பரிந்துரைகள் கொடுத்தும், எதையும் அரசு செயல்படுத்தாவிட்டால், அந்த குழுக்களால் என்ன பலன் கிடைக்கும். அனைத்து வகை நியாயங்களையும் தியாகம் செய்ய முடியாது. விவசாயிகள் போராட்டம் பற்றிய எனது பரிந்துரைகள், கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில், நான் ராஜினாமா செய்கிறேன்" இவ்வாரு அந்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் நாகவுரைச் சேர்ந்த ஹனுமான் பெனிவால், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, மனுக்கள் மற்றும் தொழில்துறை ஆகிய 3 குழுக்களில் உறுப்பினராக இருந்தார்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமன் பெனிவால் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய அவர், விவசாயிகள் மீதான சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications