மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் முன்னாள் ஆளுநர்..‘நறுக்’ என பதிலடி கொடுத்த அமித்ஷா..என்னாச்சு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் சம்பவம் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். இவரது பொறுப்பு காலத்தில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலும் நடைபெற்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதல் மற்றும் பாஜக அரசு மேற்கொண்ட மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய இரண்டு நிகழ்வுகளின் போது ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், 2019 ஆம் ஆண்டு இறுதியில் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன்பிறகு மேகாலயா மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், புல்வாமா சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்ட அண்மையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சத்யபால் மாலிக், "சிஆர்பிஎப் வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே நடந்தது. வீரர்களை அழைத்து செல்ல விமானம் கேட்கப்பட்டது. ஆனால் விமானம் வழங்கப்படவில்லை.
விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது. இது குறித்து பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் பிரதமர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம், அமைதியாக இருங்கள்" என்று கூறினார். சத்யபால் மாலிக்கின் இந்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா இது குறித்து பேசியிருக்கிறார்.
அமித்ஷா கூறுகையில், எதையும் மறைக்கும் வகையில் பாஜக செய்யவில்லை. சத்யபால் மாலிக் கூறியது பொது மன்றங்களில் விவாதிக்கக் கூடியது இல்லை. முறைகேடுகள் இருப்பது பற்றி அவருக்கு தகவல் இருந்தால் அவரது பதவி காலத்திலேயே அதை சத்யபால் தெரிவித்து இருக்க வேண்டும். தற்போது ஏன் இதுபோன்ற அவர் பேச வேண்டும்? இது நம்பகத்தன்மையை உறுதிபடுத்த வேண்டியதை காட்டுகிறது" என்றார்.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications