அரசியல் செய்யாமல் சொல்லுங்கள்.. விமானப்படை தாக்குதலில் ஒருவராவது கொல்லப்பட்டாரா? காங்கிரஸ் கேள்வி!
இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பெரிய விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது பெரிய விவாதமாக உருவெடுத்து இருக்கிறது.
கடந்த வாரம் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பாலக்கோடு உட்பட நான்கு இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 3 அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் பலியானார்கள் என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறி உள்ளது.

என்ன கூறியது
முதலில் வெளியான தகவலின்படி இந்த தாக்குதலில் 300 - 400 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்பின் நேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தாக்குதலில் 250 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறினார். ஆனால் பாகிஸ்தான் அரசு இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
|
காங்கிரஸ்
இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியது. இதுகுறித்து காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி கபில் சிபல் எழுப்பியுள்ள கேள்வியில், நியூயார்க் டைம்ஸ், லண்டனின் ஜேன் இன்பர்மேஷன் குரூப், வாஷிங்டன் போஸ்ட், டெய்லி டெலிகிராப், தி கார்டியன், ராய்ட்டர்ஸ் என்று வெளிநாட்டு ஊடகங்கள் யாருமே பாகிஸ்தானில் யாருமே சாகவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் ஏன் மாற்றி கூறுகிறீர்கள், இந்த தாக்குதலை ஏன் அரசியலாக்க பார்க்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
|
மனிஷ் திவாரி
அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ''விமானப்படை மேஜர் ஆர்ஜிகே கபூர் கூறுகையில், இப்போதைக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று சொல்ல முடியாது. பலி எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாது, என்கிறார். ஆனால் அமித் ஷா 250 பேர் பலியாகிவிட்டதாக கூறுகிறார். இந்த விமான தாக்குதலை வைத்து அமித் ஷா அரசியல் செய்கிறார்'' என்று மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
|
ப.சிதம்பரம் கேள்வி
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ''விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது?இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு?, என்று கேட்டு இருக்கிறார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications