சொன்னதை செஞ்சிட்டாரு மோடி.. நாங்க சொல்றதைதான் செய்வோம்.. கொண்டாட்டத்தில் பாஜக
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சொன்னதை செய்துவிட்டார் என 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- நீக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதற்கு காஷ்மீர் மாநில அரசியல்வாதிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ராம் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடியின் பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Promise fulfilled pic.twitter.com/iiHQtFxopd
— Ram Madhav (@rammadhavbjp) August 5, 2019
அந்த பதிவில் சொன்னதை செய்துவிட்டார் மோடி என ராம் யாதவ் பாராட்டியுள்ளார். அந்த புகைப்படத்தில் மோடி அமர்ந்திருக்கும் இடத்துக்கு பின்னால் ஒரு பேனர் உள்ளது. அந்த பேனரில் 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும், தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும், நாட்டை காக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் ராம் யாதவ் சொல்வது என்னவென்றால் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பது இந்த நாட்டின் நீண்ட கால கோரிக்கை. அதை தற்போது மோடி நிறைவேற்றிவிட்டார்.












Click it and Unblock the Notifications