ஊழலை ஒழித்து.. சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வோம்! பாஜக வாக்குறுதி
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல வாக்குறுதிகள் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவை 5வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு உயர்த்துவோம் என பாஜக கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினமான இன்று, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மோடியின் கேரண்டி என்கிற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக பாஜகவினர் கூறியுள்ளனர். இதில்,
1. முத்ரா திட்டத்தின் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை
2. இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவோம் - பாஜக
3. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - பாஜக
4. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் - பாஜக
5. 3 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்படும்; 5 ஆண்டுகளுக்கு இலவச தானியம் - பாஜக
6. புதிய விமான நிலையங்கள், புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும் - பாஜக
ஆகிய வாக்குறுதிகள் கவனம் பெற்றிருக்கின்றன. இதில் இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவோம் என்கிற வாக்குறுதியை பொருளாதார வல்லுநர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
கடந்த 2022ம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது என்று ப்ளூம்பெர்க் நிறுவனம் கூறியிருந்தது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்ததே, இந்தியா 5வது இடத்திற்கு வர காரணம் என்று ப்ளூம்பெர்க் கூறியிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது. விரிவாக சொல்வதெனில், கடந்த 2014ம் ஆண்டில் நமது ஜிடிபி 2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3 டிரில்லியன் டாலராகவும் இருந்தது. இது 2022ல் இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலராகவும் உயர்ந்தது.
இதே நிலை தொடர்ந்தால், 2027ல் இந்தியாவின் ஜிடிபி 5.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 4.6 டிரில்லியன் டாலராகவே இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டுதான் பாஜக தற்போதைய தேர்தல் அறிக்கையில், இந்தியாவை சர்வதேச பொருளாதாரத்தில் 3வது நாடாக உயர்த்துவோம் என்று கூறியிருக்கிறது. பாஜகவின் இந்த அறிக்கைக்கு பொருளாதார வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்











Click it and Unblock the Notifications