54 ஆயிரம் பணியார்களை நீக்க முடிவு ! மூடப்படுகிறதா பிஎஸ்என்எல்?
டெல்லி: 54 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஓய்வு பெறும் வயதையும் 58 ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்பட உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம்,13000 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7993 கோடி அளவுக்கு நஷ்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் ஆகும்.

பிஎஸ்என்எல் அதிரடி முடிவு
இதனிடையே நிதி நெருக்கடி காரணமாக பிஎஸ்என்எல் நிர்வாகம் 10 முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் முக்கியமானது 54 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது உள்ள்ளிட்டவையும் அடங்கும்.

ஓய்வு வயது குறைப்பு
பிஎஸ்என்எல் நிறுவனம் முக்கியமான ஒரு சீர்திருத்தமான ஒய்வு பெறும் வயதை 60இல் இருந்து 58 ஆக குறைத்துள்ளது. இந்த ஒரு நடவடிக்கையின் மூலமாக மட்டுமே 33568 பேர் வேலையை இழப்பார்கள்.

விருப்ப ஓய்வு
50 வயதைக் கடந்த அனைத்து பணியாளர்களுக்கும் விருப்ப ஓய்வு கொடுக்கும் திட்டத்தையும் பிஎஸ்என்எல் விரைவில் அறிவிக்க உள்ளதாம். மேற்கண்ட சீர்திருத்தங்கள் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 54451 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது.

வேலை இழப்பார்கள்
இதன் மூலம் நாட்டின் தற்போது வேலை வார்க்கும் 1.74 லட்சம் பிஎஸ்என்எல் பணியார்களில் 30 சதவீதம் பேர் வேலையை இழப்பார்கள் என தெரிகிறது. இந்த 54 ஆயிரம் பேர்களும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது., இவர்கள் அனைவரையும் விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப பிஎஸ்என்எல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சம்பளம் நிறுத்தம்
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள தனது 1.74 லட்சம் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தராமல் இழுத்தடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பிறகு ஒருவழியாக சம்பளத்தை கொடுத்தது தனிக்கதை. இது ஒருபுறம் எனில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

5 ஆயிரம் கோடி லாபம்
கடந்த 6 மாதங்களாக தினக்கூலி ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் பிஎஸ்என்எல் நிர்வாகம், 35 ஆயிரம் ஊழியர்களை நீக்குவதன் மூலம் 5 ஆயிரம் கோடி பணத்தை சேமிக்க திட்டமிட்டுள்ளது. அதேநேரம் 30 சதவீத பணியாளர்களை நீக்குவதால் குறைந்த பட்சம் 13 ஆயிரம் கோடிக்கு மேல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஊதியம் மற்றும் பணப்படியை சேமிக்க முடியும் என கருதுகிறது. இது பற்றிய அறிவிப்பு தேர்தலுக்கு பின் வரும் என எதிர்பார்க்கலாம்.
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications