பேச்சுவார்த்தை புரயோஜனமில்லை...வேளாண் சட்டத்தை ரத்து பண்ணுங்க... மாயாவதி கோரிக்கை!
டெல்லி: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 45 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
கடைசியாக அவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்தது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என பிடிவாதமாக உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறியதாவது:-
டெல்லி எல்லையில் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வையுங்கள் என்று மாயாவதி கூறியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications