விவசாயிகள் நலனில்... மத்திய அரசுக்கு அதிக அக்கறை உள்ளது.. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர்
டெல்லி: விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை 16.5 லட்சம் கோடியாக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளைத் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
மத்திய அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த பட்ஜெட் முதல் முறையாகக் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது

அதேபோல பெண்கள் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்டே தனது உரையை நிதியமைச்சர் தொடங்கினார். தனது பட்ஜெட் உரையில், வேளாண் துறை குறித்துப் பேசு தொடங்கிய நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலனில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். அப்போது எதிர்க்கட்சி எம்பிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "அனைத்து பயிர்களின் உற்பத்தி விலையைவிடக் குறைந்தபட்சம் 1.5 மடங்கு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை மாற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு நிலை இரட்டிப்பாக்கப்பட்டது. இதன் மூலம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்தனர்.

அதேபோல அரசின் நேரடி கொள்முதலும் நிலையான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தொகையும் அதிகரித்துள்ளது. கோதுமை விவசாயிகளுக்கு 2013-14ஆம் ஆண்டு 33,874 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது 2019-20 ஆண்டில் 62,802 கோடி ரூபாயாகவும் 2020-21 ஆண்டில் 75,060 கோடி ரூபாயாகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் பருத்தி விவசாயிகளுக்கு 90 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இந்தத் தொகை 2020-21ஆம் ஆண்டில் 25 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 43.36 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்" என்றார்.
அதேபோல இந்தாண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தவுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications