அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்... பட்ஜெட்டில் அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட உள்ளது என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் வேலைவாய்ப்புத் துறை தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதாவது: சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. பெண்கள் போதுமான பாதுகாப்புடன் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications