Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் முட்டி மோதும் கர்நாடகா! மத்திய அமைச்சருடன் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

Cauvery water Dispute: Karnataaka MPs meet Union Minister Gajendra Singh Shekhawat

கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இருந்தும் குடிநீருக்காக தேவை, வறட்சி பாதிக்கப்பட்டுள்ளது என கூறி தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட மறுக்கிறது அம்மாநில அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் 2 முறை உத்தரவிட்ட போதும் சொற்பமான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கே அதெப்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடலாம் என 2 வாரங்களுக்கும் மேலாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அத்துடன் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், ஏற்கனவே மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரசன்னையில் தலையிட வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் டெல்லியில் முகாமிட்டார். கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பிக்களுடன் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் இன்று காலை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடகா மாநில அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் குழு சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின் போது, காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் சட்டப்பூர்வமான போராட்டங்கள் மூலமே கடந்த காலங்களில் காவிரி நதிநீர் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதே போலவேதொடர்ந்து செயல்படுவோம் என்பது நிலைப்பாடு. கர்நாடகாவோ, சட்டப் போராட்டமே வேண்டாம்.. பேச்சுவார்த்தை நடத்தலாம் என பழைய நிலைமைக்கு அழைக்கிறது. கர்நாடகவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நாம் முன்வைக்கிற கோரிக்கை எதனையும் கர்நாடகா காதிலேயே வாங்காது.. ஆகையால்தான் பேச்சுவார்த்தையே கூடாது; சட்டப் போராட்டம் எனும் ஆயுதமே நமக்கான வழி.. அதையே கெட்டியாக பிடித்துள்ளோம் என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+