சாரதா நிதி நிறுவன முறைகேடு... கைதாகிறார் கொல்கத்தா போலீஸ் கமிஷனர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Cbi to arrest kolkata police commissioner rajeev kumar for chit fund scams

அந்த வழக்கில், நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கே.டி.சிங் தொடர்புடைய நிறுவனத்தின் 239 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது.

இந் நிலையில், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 3 நாட்களாக அவரை காண வில்லை என்றும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தொடர்புடைய விசாரணையில் அவரும் பங்கெடுத்துள்ளார்.

அதுதவிர... அந்த வழக்கை பல நேரங்களில் விசாரணையின் போது தாமதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1983ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+