வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நிதி முறைகேடு.. வீடியோகான் சேர்மன் வேணுகோபால் தூத் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்
டெல்லி: ஊழல் வழக்கு தொடர்பாக வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சேர்மன் வேணுகோபால் தூத் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு வேண்டுமென்றே நிதி இழப்பை ஏற்படுத்தியதற்காக இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்கியதில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளில் கூட்டமைப்பால் பிறகு கையகப் படுத்தப்பட்டன.
வங்கிகளின் கூட்டமைப்பிலுள்ள அதிகாரிகள், 'வீடியோகான் மொசாம்பிக்' என்ற வீடியோகானின் துணை நிறுவனத்தின், புரமோட்டர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
லண்டனின் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு வேணுகோபால் தூத், 650 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எஸ்பிஐ, ஐடிபிஐ மற்றும் ஐசிஐசிஐ ஆகிய மூன்று வங்கிகளும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு 705.45 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளன.
இந்த தொகையை செலுத்திவிட்டு, வீடியோகானின் ஆப்பிரிக்க சொத்துக்களை, மேற்சொன்ன வங்கிகள் கையகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், 2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இந்த தொகையை வங்கிகள் செலுத்தியபோதிலும், அவர்கள், 2013ம் ஆண்டு நவம்பர் வரை சொத்துக்களை கையகப்படுத்தவில்லை. இது வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இடைப்பட்ட 9 மாதங்களில் வீடியோகானுக்கு முறைகேடாக, லாபத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல்கள் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications