வழக்குகளால் பிடியை இறுக்கிய சிபிஐ.. மம்தா.. மாயாவதி.. அகிலேஷ் யாதவ் கலக்கம்
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீதான பிடியை சிபிஐ இருக்கியுள்ளது. இவர்கள் மூன்று பேர் மீதான வழக்கும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, 2011-12-ம் ஆண்டு முதல்வராக இருந்த காலகட்டத்தில், உத்தரபிரதேசத்தில் 21 சர்க்கரை ஆலைகளை விற்பனை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.

இதேபோல், சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் அவரது ஆட்சி காலத்தில் 13 சுரங்கங்களை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ. இதற்கான குற்றப்பத்திரிகை தயாரித்துள்ளது.
மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்து. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்ததது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தற்போது தீவிரமாகிக்கி உள்ளனர். சாரதா சிட்பண்ட் ஊழலில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரது பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இப்படி அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி உளிளட்ட மூன்று கட்சிகள் தலைவர்களும் முறைகேடு குற்றச்சாட்டுகளால் சிக்கி சிபிஐயின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications