2ஜி வழக்கின் விசாரணை அதிகாரி உள்பட 20 பேர் மாற்றம்.. அதிரடியை தொடங்கிய நாகேஸ்வர ராவ்
டெல்லி: சிபிஐ அமைப்பில் 20 அதிகாரிகளை அந்த அமைப்பின் இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.
அதன்படி, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்த அவர், சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட வழக்கை விசாரித்து வரும் சரவணன் மாற்றப்பட்டுள்ளார். போலீஸாரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் அவர், மும்பை வங்கி முறைகேடு விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்பிரிவுதான் தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையையும் அவர் தொடர்வார் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு அதிகாரியாக பிரேம் கெளதம் மாற்றப்பட்டுள்ளார். அவர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பேற்கிறார். சத்தீஸ்கரில் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த ராம் கோபால், சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.
இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு எடுக்கும் என்று தெரிவித்திருந்தது.
அதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவியேற்ற 2 நாள்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலைக்குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications