2ஜி வழக்கின் விசாரணை அதிகாரி உள்பட 20 பேர் மாற்றம்.. அதிரடியை தொடங்கிய நாகேஸ்வர ராவ்
டெல்லி: சிபிஐ அமைப்பில் 20 அதிகாரிகளை அந்த அமைப்பின் இடைக்கால இயக்குநரான நாகேஸ்வர ராவ் அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.
அதன்படி, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷினியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்த அவர், சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட வழக்கை விசாரித்து வரும் சரவணன் மாற்றப்பட்டுள்ளார். போலீஸாரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் அவர், மும்பை வங்கி முறைகேடு விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்பிரிவுதான் தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணையையும் அவர் தொடர்வார் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு அதிகாரியாக பிரேம் கெளதம் மாற்றப்பட்டுள்ளார். அவர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பேற்கிறார். சத்தீஸ்கரில் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருந்த ராம் கோபால், சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.
இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு எடுக்கும் என்று தெரிவித்திருந்தது.
அதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவியேற்ற 2 நாள்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலைக்குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications