மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்... மத்திய அரசு அனுமதி
டெல்லி: மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் இனி வரும் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசித்து தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் இனி வரும் காலங்களில் சிரமமின்றி முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும்.

ஆள்துணை
தேர்தலில் வாக்களிக்க வரும் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு மையங்களுக்கு வருவதற்காக ஆள் துணை தேட வேண்டிய நிலை இப்போது பரவலாக உள்ளது. மேலும், வாக்குப்பதிவு மையங்களில் சாய்தள பாதை(ரேம்ப் வசதி) இல்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய அவலம் உள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் அன்று வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியோர்கள் படும் சிரமங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

திருத்தம்
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளும், 80 வயதை எட்டிய முதியோர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது.

யார் யாருக்கு?
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தபால் ஓட்டு உரிமை ஏற்கனவே உள்ள நிலையில், அந்த பட்டியலில் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்கள் இப்போது புதிதாக இணைந்துள்ளனர்.

புதிய முயற்சி
தேர்தலின் போது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications