நிதி ஆயோக் அமைப்பில் முக்கிய மாற்றம்.. உள்ளே வந்த கூட்டணி கட்சி தலைவர்கள்! 3 பேர் அவுட்!
டெல்லி: நிதி ஆயோக் அமைப்பை சீரமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நிதி ஆயோக் என்பது இந்தியாவில் செயல்பட்ட திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு. இதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு கடந்த மாதம் பதவியேற்றது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நிதி ஆயோக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே.பால் மற்றும் மேக்ரோ பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் அரசாங்க சிந்தனைக் குழுவின் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமருக்குப் பதிலாக, நிதி ஆயோக் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற அதிகாரப்பூர்வ உறுப்பினர்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன் மஞ்சி ராம், லாலன் சிங் வீரேந்திர குமார், ஜுவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பஸ்வான், கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு, ராவ் இந்தர்ஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக இருந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த முறை பட்டியலில் இல்லை. முன்னதாக நிதின் கட்கரி, வீரேந்திர குமார் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர்.
நிதி ஆயோக்கின் திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications