இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய மருந்து தரக்கட்டுபாடு அமைப்பு அளித்துள்ளது.
Recommended Video

இந்தியாவில் கொரோனாவால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகாவும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்தை புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அது போல் பாரத்பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த இரு தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது.
இதையடுத்து இந்த இரு மருந்துகளையும் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதன் மூலம் அந்த இரு தடுப்பு மருந்துகளும் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த இரு தடுப்பு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் வைத்து பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அனுமதி அளித்த நிலையில் இரண்டாவது நாடாக இந்தியாவும் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications