விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
டெல்லி: இன்று நடைபெறவிருந்த மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது. ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 50 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டது.
ஆனால் இதுவரை நடந்த எந்த பேச்சுவார்த்தையிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. 10-ம் கட்ட பேச்சுவார்த்தை முதலில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஒருநாள் தாமதமாக நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு விஜியன் பவனில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தரப்பில் விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய வேளாண் இணை அமைச்சர் பார்ஷோட்டம் ரூபாலா இது தொடர்பாக கூறுகையில், வெவ்வேறு இலட்சியவாதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து 'தங்கள் சொந்த வழியில் ஒரு தீர்வை' விரும்புவதால் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்க தாமதமாகி விட்டது. விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் ஒரு ஆரம்ப தீர்வு இருந்திருக்கலாம். இரு தரப்பினரும் ஒரு தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் அவை வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன, எனவே இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவு கிடைத்தே தீரும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications