மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பல்துறை விசாரணை அமைப்பு கலைப்பு
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நடந்த சதி திட்டம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட எம்டிஎம்ஏ எனப்படும் பல்துறை கண்காணிப்பு அமைப்பை (Multi Disciplinary Monitoring Agency) மத்திய அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்தார். தனது தாயார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரச்சார மேடைக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது தற்கொலை படை தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிக்க எம்.சி. ஜெயின் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்துறை கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.
இதன்படி சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் இடம்பெற்ற பல்துறை கண்காணிப்பு அமைப்பு கடந்த 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த அமைப்பின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
ராஜீவ் காந்தி கொலையில் சதி திட்டம் தொடர்பாக இலங்கை, பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தகவல் கேட்டு இந்த அமைப்பின் சார்பில் கடிதங்கள் எழுதப்பட்டன. அதில் பெரும்பாலும் பதில் கிடைத்துவிட்டது. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டோர் வெறும் அம்புகள் என்றும் அதை எய்திய அம்புகளை எம்டிஎம்ஏ அமைப்பு கண்டுபிடிக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜீவ் கொலைக்கான சதி குறித்து சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த அமைப்பை கலைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அமைப்பு நடத்தி வந்த விசாரணையை சிபிஐயின் ஒரு பிரிவே கவனிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications