ரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 28 லட்சம் மதிப்புள்ள 578 கிராம் தங்கத்தைச் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகச் சோதனைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தின் வழியே பெரியளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று விமான பயணிகளின் சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தங்கத்தைக் கடத்தி வந்த பயணி ஒருவரிடம் இருந்து சுமார் 578 கிராம் தங்கத்தைச் சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். அவர் கடத்தி வந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 28 லட்சமாகும். இது தொடர்பாக அந்த பயணியிடம் தீவிர விசாரணையைச் சுங்க துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications