தள்ளி போகிறது 20 தொகுதி இடைத்தேர்தல்?.. தலைமை தேர்தல் ஆணையர் திடீர் பேச்சால் பரபரப்பு
டெல்லி: கஜா புயலை காரணம் காட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தற்போது தள்ளி போக வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.
தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது. இவற்றில் இரு தொகுதிகளின் உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். மற்ற 18 தொகுதிகளின் உறுப்பினர்கள் கட்சி தலைமை கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல்
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஏற்கெனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பருவமழையை காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டது.

ஆணையம் முடிவு செய்யும்
தற்போது கஜா புயல் கோரதாண்டவம் நிகழ்த்தியுள்ள நிலையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து தந்தி டிவிக்கு தேர்தல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதினால் அதுகுறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

கடிதம் எழுதாவிட்டால்
அவ்வாறு தமிழக அரசு அறிக்கையோ கடிதமோ எழுதாவிட்டாலும் தேர்தல் ஆணையம் அதை கேட்கும். கஜா புயல் சீரமைப்பு பணிகள் முடிவடைய இன்னும் 4 மாதங்கள் ஆகும் என்றால் அதை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றார்.

சாத்தியக்கூறுகள் குறைவு
திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாலும் இன்னும் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாலும் மீண்டும் தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கேட்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தலைமை தேர்தல் ஆணையரின் பேட்டியும் உள்ளது. எனவே 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றே தோன்றுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications