மாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி!
டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் த
டெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்திற்கு எதிராக தற்போது டெல்லி கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் உள்ளே புகுந்து தற்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே நின்று இருந்த பேருந்துகள் மூன்று கொளுத்தப்பட்டதுதான் இதற்கு காரணம். இதை செய்தது மாணவர்கள்தான் என்று போலீசார் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் இதை செய்தது போலீஸ்தான் மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

இந்த கலவரத்தால் போலீசார் மாணவர்கள் பலர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் சில மாணவர்கள் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் அளித்த பேட்டியில், போலீஸ் எங்கள் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து இருக்கிறது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, நாங்கள் எதுவும் செய்யவில்லை.
பேருந்தை நாங்கள் இருக்கவில்லை. யாரை கேட்டு போலீசார் உள்ளே வந்தனர். நூலகத்தில் படித்துக் கொண்டு இருந்தவர்களை உள்ளே சென்று தாக்கி இருக்கிறார்கள். இதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது, என்று நஜ்மா அக்தர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications