Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'டர்புலன்ஸ்'-ஐ அதிகரிக்கும் காலநிலை மாற்றம்.. இனி விமான பயணமே ஆபத்தானதுதான்! விஞ்ஞானிகள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான டர்புலன்ஸ் மற்றும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இனி வரும் நாட்களில் டர்புலன்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் என்றும், காலநிலை மாற்றம் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆலங்கட்டி மழை காரணமாக இண்டிகோ விமானத்தின் மூக்குப்பகுதி உடைந்திருந்தாலும், டர்புலன்ஸ் பிரச்சனை பயணிகளின் உயிரையே பறித்திருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக, சாதுர்யமாக செயல்பட்ட விமானி, 277 பயணிகளின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.

Jet flights climate change

சிஏடி டர்புலன்ஸ் என்றால் என்ன?

காற்று மாறுபாடு காரணமாக விமானங்கள் குலுங்குவதைத்தான் டர்புலன்ஸ் என்று அழைக்கிறார்கள். வானில் காற்றின் வேகம் சீராக இருக்கும். புயல், சூறாவளி உள்ளிட்ட சமயங்களில் இதில் மாற்றங்கள் ஏற்படும். இதனை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியும். எனவே பாதையை மாற்றி வேறு பாதையில் சீராக போக முடியும். ஆனால் விமானிகளுக்கும், மொத்த விமான துறைக்கும் இப்போது இருக்கும் பெரிய பிரச்சனை, CAT எனப்படும் தெளிவான காற்று கொந்தளிப்புதான்.

உயிரை பறித்த டர்புலன்ஸ்

அதாவது தெளிவான வானத்தில், சீரான வானிலையில் இந்த பிரச்சனை ஏற்படும். இதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இதில் சிக்கும் விமானங்கள் பயங்கரமாக குலுங்கும். கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்காவின் கீனி நகரத்திலிருந்து விர்ஜினியா மாகாணத்திற்கு 'பம்பார்டியர் சேலஞ்சர்' என்கிற பயணிகள் விமானம் 300 பயணிகளுடன் சென்றது. அது எதிர்பாராத விதமாக சிஏடி டர்புலன்சில் சிக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையாக காயமடைந்தனர்.

இண்டிகோ விமானம் கற்ற பாடம்

அதை தொடர்ந்து தற்போது நடந்திருக்கும் இண்டிகோ விமான சம்பவம் டர்புலன்ஸ் பாதிப்புகளின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. விமானத்தின் இறக்கைகளுக்கு கீழே சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் காற்று, திடீரென திசை மாறும்போது விமானம் சிஏடி டர்புலன்ஸை எதிர்கொள்ளும். மலை மீது மோதி காற்று மேலெழும்பும்போது அதன் திசை மாறுபடுகிறது அல்லவா, அதுபோன்று காற்று திசை மாற்றத்தின்போது இந்த பிரச்சனை ஏற்படும்.

Jet flights climate change

விஞ்ஞானிகளின் ஆய்வு

டர்புலன்ஸ் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 1979 மற்றும் 2020 க்கு இடையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த சிஏடி டர்புலன்ஸ் சுமார் 55% அதிகரித்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் மிதமான முதல் கடுமையான சிஏடி 60% முதல் 155% வரை அதிகரித்துள்ளது என இங்கிலாந்தின் பிரபல பல்கலைக்கழகமான 'ரீடிங் யுனிவர்சிட்டி' நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் விமானங்கள் சுமார் 68,000 முறை சிஏடி பிரச்சனையை எதிர்கொள்கிறது. இது இன்னும் அதிகரிக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் காற்றின் திசைவேகம் திடீரென மாறுபடுவது 17% முதல் 29% வரை அதிகரிக்கக்கூடும். இது வான் வழி பாதையை கரடு முரடானதாக மாற்றும்.

Jet flights climate change

எதிர்கால விமான பயணம்

வெறும் குலுங்கல்தானே என்று இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. காரணம் காற்றின் திசை மாற்றம் ஆலங்கட்டி மழையை கொடுக்கும் புயல்களை அதிக அளவுக்கு உருவாக்கும். இது மட்டும் நடந்தால் விமான பயணம் என்பதே சவாலானதாக மாறிவிடும். இதை சமாளிக்க விமான நிறுவனங்கள் கோடி கோடியாக செலவிட வேண்டி வரும். இது டிக்கெட் ரேட்டை உயர்த்தும். அப்படி பார்த்தால் எதிர் காலத்தில் கோடீஸ்வரர்கள் மட்டுமே விமானத்தில் போக முடியும் என்கிற சூழல் உருவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+