கடைசிவரை கணவன் இறந்தது தெரியாமலேயே.. உயிரை விட்ட டீச்சர்.. ஒரே ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்த சோகம்
டெல்லியில் கொரோனாவால் தம்பதி உயிரிழந்துள்ளனர்
டெல்லி: தொற்று பாதிப்பு ஏற்பட்டு, கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் தொற்று அதிகமாகி உள்ளது.. இதனால் லட்சக்கணக்கோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வருபவர் பவன் குமார்.. இவரது மனைவி பெயர் ஜசல்.. டெல்லியில் உள்ள மடா சுந்தரி காலேஜில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர்.

தொற்று
பவன்குமாருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போகவும் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.. அப்போதுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முயன்றனர்.. ஆனால, டெல்லியில் எந்த ஆஸ்பத்திரியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

மனைவி
இதனால், பவன் குமாரின் மனைவி ஜசல், தன்னுடைய கணவனை சண்டிகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்... அங்கு உடனடியாக, பவன் குமாருக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சையும் நடந்துள்ளது.. இதனிடையே, அவரது மனைவி ஜசலுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.. எனவே, அவரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

உறவினர்கள்
இந்நிலையில், தீவிரமான சிகிச்சை தந்தும், பவன்குமார் இறந்துவிட்டார்.. ஆனால், இந்த தகவலை, சிகிச்சையில் இருந்த மனைவியிடம் உறவினர்கள் யாரும் தெரிவிக்கவில்லை... இப்படியே 10 நாட்கள் கடந்துவிட்டது.. ஆனால், மனைவியும் சிகிச்சை இறந்துவிட்டார்.. கடைசிவரை கணவன் இறந்த விஷயம் மனைவிக்கு தெரியாது.

புரமோஷன்
உயிரிழந்த துணை பேராசிரியை ஜசலுக்கு, விரைவில் காலேஜில் புரமோஷன் கிடைக்க இருந்ததாம்.. இந்த விஷயம் தெரியாமலும், அவர் உயிரிழந்துவிட்டார்.. இதனால் உறவினர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். அடுத்தடுத்து கணவன் - மனைவி ஒரே ஆஸ்பத்திரியில் இறந்த சம்பவம், அந்த பகுதியில் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications