காங்கிரஸின் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும்… நிர்மலா சீதாராமன்
டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில், இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
பொய்கள் நிறைந்தது தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாட்டை துண்டாடுவதாக உள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும்
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகளுக்கு சாதகமாக உள்ளது. தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

எதிரானவர்கள் அல்ல
ராணுவத்தின் நம்பிக்கையை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது, ஆயுதப்படை சட்டத்தை அகற்றுவதில் சில விதிமுறைகள் உள்ளன. இதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.

காங்கிரசுக்கு கேள்வி
பிரதமர் நரேந்திர மோடி அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து மேகாலயா, திரிபுரா, மற்றும் அசாமின் பெரும்பகுதியில் இதை அகற்றியுள்ளது. ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இருந்த காங்கிரஸ் அரசு எத்தனை மாநிலங்களில் ஆயுதப்படை சட்டத்தை அகற்றி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

ஆச்சரியமாக உள்ளது
காங்கிரஸின் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் கூறினார். புல்வாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களை தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார். ஆனால் அதுகுறித்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாதது ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications