நாட்டை முன்னேற்றுவதற்கான திறன் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது... பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: நாட்டை புதிய உச்சிக்கு அழைத்துச் செல்லும் திறன் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை என்றார்.
படேல், முதல் பிரதமராகி இருந்தால் நாட்டின் போக்கே மாறி இருக்கும். மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது.
ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது. நம் தேச வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. எங்களுக்கு முன்னால் உள்ள அரசு நாட்டை இருளுக்கு தள்ளியது. குறிப்பாக, 10 ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது.
பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். என்று கூறினார்.