டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டை முன்னேற்றுவதற்கான திறன் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது... பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டை புதிய உச்சிக்கு அழைத்துச் செல்லும் திறன் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இதுவரை மத்திய பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் என்று எதுவும் இல்லை என்றார்.

Congress government before us pushed the country into darkness says Modi

படேல், முதல் பிரதமராகி இருந்தால் நாட்டின் போக்கே மாறி இருக்கும். மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளாக பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளது.

ஊழலற்ற நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு தந்துள்ளது. நம் தேச வரலாற்றில் முதன்முறையாக இது நடந்தது. எங்களுக்கு முன்னால் உள்ள அரசு நாட்டை இருளுக்கு தள்ளியது. குறிப்பாக, 10 ஆண்டுகள் (2004-2014) மோசடி மற்றும் ஊழலால் இந்தியா தோல்வி அடைந்தது.

பாரதீய ஜனதாவின் பலம் தொண்டர்களிடம் தான் உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். என்று கூறினார்.

English summary
Prime Minister Modi has said that the BJP is capable of taking the country to a new level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X