கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஜனநாயகத்திலும் தோற்ற இந்தியா.. ப.சிதம்பரம் விமர்சனம்
டெல்லி: ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது என கர்நாடகா, கோவா சூழலை சுட்டிக் காட்டிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பேசினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் இக்கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் இவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் ஆளும் கட்சியின் தற்போதைய பலம் 99ஆக உள்ளது. பாஜகவின் பலமோ 105-ஆக உள்ளது. ஒருவேளை 16 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் ஆட்சி கவிழும். எனவே பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி வருகிறது.

அக்கட்சிக்கு
அது போல் கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று இரவு திடீரென பாஜகவில் இணைந்தனர். அதாவது அக்கட்சிக்கு மொத்தமுள்ள 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவில் ஐக்கியமாகி அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
|
பட்ஜெட்டில் இல்லை
இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மாநிலங்களவையில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மகிழ்ச்சியான தருணங்களில் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறேன். நாட்டின் மொத்த வருமானம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

வேலையில்லா திண்டாட்டம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாற்றங்கள் செய்வது எல்லாமே சீர்திருத்தமாகாது. துறைவாரியான ஒதுக்கீட்டு விவரங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
வேலையில்லா திண்டாட்டத்துக்கு சிறந்த உதாரணம் சொல்வதானால் 62 ஆயிரம் கலாசி பதவிகளுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முதுகலை பொறியியல் பட்டதாரிகள்
அவர்களுள் 4 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 40 ஆயிரம் பேர் எம்இ படித்தவர்கள். கர்நாடகம், கோவாவில் நிலவும் அரசியல் சூழலை பார்க்கும் போது ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது என்று கூறினார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications