களத்திற்கு வந்தார் ராகுல் காந்தி.. டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா.. சோனியாவும் வருகிறார்
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நாளை மாபெரும் தர்ணா போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சி என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல முன்னணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு முறை பயணமாக ராகுல் காந்தி வெளிநாடு சென்று திரும்பியுள்ள நிலையில் முதல் முறையாக அவரும் போராட்டக்களம் வர உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் பிரியங்கா காந்தி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியுள்ள நிலையில் இப்போது ராகுல் காந்தியும் இணைய உள்ளதால் டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியை நோக்கி குவிய தொடங்கியுள்ளனர். அதேநேரம், ராகுல் காந்தி வருகைக்காக காங்கிரஸ் தலைமை காத்துக் கொண்டு இருந்து இப்போதுதான் முழு வீச்சில் களமிறங்குகிறது என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications