Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் மணீஷ் சிசோடியா.. அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால் சிக்கி கைதாவார்.. சுகேஷ் பரபரப்பு தகவல்

அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கை ஊழலில் அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் இடைத்தரகர், பெரிய பணக்காரர்களிடம் தங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி அவர்களிடம் மோசடி செய்துள்ளார்.

இவர் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டெல்லி திகார் சிறையில் இருந்தார்.

மருந்து நிறுவன உரிமையாளர்

மருந்து நிறுவன உரிமையாளர்

மேலும் மருந்து நிறுவன உரிமையாளரின் மனைவியிடம் சிறையில் இருந்தபடியே சுகேஷ் சந்திரசேகர் ரூ 200 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பணத்தில் அவர் பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் மோசடி செய்து பெற்ற இந்த பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுக போக வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிகிறது.

ரூ 10 கோடி

ரூ 10 கோடி

அந்த பணத்தில் சுமார் ரூ 10 கோடி வரை ஜாக்குலினுக்கு சுகேஷ் செலவு செய்தாராம். அது போல் நோரா பதேஹி உள்ளிட்ட நடிகைகளும் அந்த பணத்தில் பலன் பெற்றனராம். சுகேஷ் குறித்து திடுக் தகவல்கள் தெரிந்த போதும் அவருடனான உறவை நடிகை ஜாக்குலின் கைவிடவில்லை என விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

 சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

இவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்காக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். அது முதல் இவருக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆம் ஆத்மி மீது சுகேஷ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

 ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் ஆம் ஆத்மி கட்சிகள் பணம் கேட்டதாகவும் அவ்வாறு பணம் கொடுத்தால் தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக சுகேஷ் கூறியிருந்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

 அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்திருந்தார். இந்த நிலையில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரூ 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

 அடுத்தது கெஜ்ரிவால் சிக்குவார்

அடுத்தது கெஜ்ரிவால் சிக்குவார்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய சுகேஷிடம் மணீஷ் சிசோடியா கைது குறித்து கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர், உண்மை வென்றது என கூறிவிட்டு அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விரைவில் கைது செய்யப்படுவார் என பரபரப்பு தகவலை அளித்துள்ளார். சுகேஷ் போர்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் மல்வீந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க ரூ 3.5 கோடி தருமாறு அவருடைய மனைவி ஜாப்னா சிங்கிடம் பெற்றதாக கடந்த ஆண்டு சுகேஷ் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான சுகேஷ் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் கைதாகி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+