உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சம்.. இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா
டெல்லி: உலகில் நேற்று எந்த நாட்டிலும் இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் 1,15,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடத்தில் பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. உயிரிழப்பை பொறுத்தவரை பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 4211 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது மிகப்பெரிய உச்சம் ஆகும்.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 133,015,276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 2,885,894 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 107,258,758 பேர் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் 22,870,624 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெறுகிறார்கள்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 31,560,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 13,106,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 12,799,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா தொற்றால் இதுவரை 4,841,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 115,269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 82,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 62,283 பேர் பாதிக்கப்பட்டனர். துருக்கியில் நேற்று 49,584 பேருக்கும், அர்ஜெண்டினாவில் 20,870 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகிலேயே நேற்று அதிகபட்சமாக பிரேசிலில் 4211 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 906 பேரும்., இந்தியாவில் 631 பேரும், உக்ரைனில் 430 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications