ஏடிஎம்மில் பணம் எடுத்தனர்.. மறுநாளே 3 ராணுவ வீரர்களுக்கு பரவிய கொரோனா.. குஜராத்தை உலுக்கிய சம்பவம்!

ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா second wave தாக்கும்

    கொரோனா இந்தியாவில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,530 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 780 பேர் பலியாகி உள்ளனர்.

    ராணுவ வீரர்கள்

    ராணுவ வீரர்கள்

    இந்த நிலையில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரோடாவில் இருக்கும் ஏடிஎம் ஒன்றில் இவர்கள் பணம் எடுத்துள்ளனர். இவர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலம் எங்கும் செல்லவில்லை. இவர்கள் மூவரும் ஒன்றாக இணையும் புள்ளி அந்த ஏடிஎம் மட்டும்தான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஏடிஎம் எப்படி

    ஏடிஎம் எப்படி

    அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மில் பணம் எடுத்த பின்புதான் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஏடிஎம் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த ராணுவ வீரர்கள் தொடர்பு கொண்ட மற்ற ராணுவ அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குஜராத்தின் வதோதராவில் இருக்கும் ராணுவ வீரர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வேறு யார் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    வேறு யார் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    அதேபோல் இந்த மூன்று ராணுவ வீரர்கள் தொடர்பு கொண்ட 26 பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஏடிஎம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்கள் தாமாக முன் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா உதவியுடன் அங்கு வந்தவர்கள் யார் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    பணம் மூலம்

    பணம் மூலம்

    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பணம் மூலம் கொரோனா பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் சீனா உட்பட பல நாடுகளில் ரூபாய் நோட்டுகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. சீனாவில் இதனால் தற்போது டிஜிட்டல் கரன்சிகள் கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது ஏடிஎம் மூலம் மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+