அறிகுறியே இல்லை.. ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு திடீர் கொரோனா பாதிப்பு.. புதிய சிக்கல்!
டெல்லி: ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா வந்தே பாரத் மிஷன் ஆபரேஷனை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி கடந்த மே 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

வரும் 13ம் தேதி வரை இந்த மீட்பு பணி நடக்கும். பல நூறு இந்தியர்கள் இதுவரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மொத்தம் 77 விமானிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் பலர் மூத்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறியே இல்லை. அறிகுறியே இல்லாமல் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற விமானிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஐந்து விமானிகளும் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஓட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர்கள் கடந்த ஏப்ரல் 20ம் தேதி விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.
இந்த விமானம் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டதாகவும், அவசர அரசு தேவைக்கு இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு கொரோனா வந்திருக்கலாம். இந்தியாவில் விரைவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்கிறார்கள். இந்த நிலையில் விமானிகள் 5 பேருக்கு கொரோனா இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications