இந்தியாவில் வேலைகளையும் வேட்டையாடிய கொரோனா.. புதிய உச்சம் தொட்ட வேலையின்மை
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து உலகமே பொருளாதாரமே பேரழிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட இந்தியாவை இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை மோசமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 353 பேர் இந்தியா முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவால் இந்தியாவில் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில், வேலைவாய்ப்பு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தது. நாட்டில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக இரட்டை இலக்கத்தை சந்தித்துள்ளது.

வேலையின்மை
சென்டர் ஃபார் மானிட்டரிங் எகனாமியின் (சி.எம்.ஐ.இ) வெளியிட்ட ஆய்வின் படி , மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது மார்ச் ஆரம்பத்தில் 8.4 சதவீதமாக இருந்த வேலையின்மை மார்ச் இறுதியில் 23.8 சதவீதமாக உயர்ந்தது.

7 சதவீதம் டூ 23 சதவீதம்
கொரோனா வைரஸ் பிரச்னை வெளியான ஜனவரி மாதத்தில் இருந்தே வேலையின்மை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்தது. செப்டம்பர் 2016 முதல். வேலையின்மை விகிதம் நாட்டில் வேகமாக அதிகரித்தது. 2020 ஜனவரி மாதத்தின் 7.16 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.7 சதவீதமாக உயர்ந்தது. இது 43 மாதங்களில் மிக உயர்ந்த வேலையின்மை விகிதமாகும். தற்போது லாக்டவுன் தொடங்கிய நிலையில் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏப்ரலில் இன்னும் மோசம்
மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் என்பது 38.2 சதவீதமாக குறைந்துள்ளது. லாக்டவுன் காரணமாக வேலைவாய்ப்பே நிலவரம் மோசமான கட்டத்தை எட்டிள்ளது என்று சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் வேலையின்மை பிரச்சனை விஷயங்கள் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி, 30 நாளில் மட்டும் வேலையின்மை விகிதத்தின் சராசரி 13.5 சதவீதம் உயர்ந்தது.

விவசாய வேலையும் முடக்கம்
இந்தியாவில் நகர்ப்புறங்களில், கிராமங்களிலும் இரட்டை இலக்கத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விவசாய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் வேலையின்மை 13.08 சதவீதத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் இது 14.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

புதிய உச்சம் தொட்டது
"ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைகள் குறைந்துள்ளது. வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 10 லட்சம் ஆக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் 39 கோடியே 60 லட்சமாக குறைந்துள்ளது. இதன் மூலம் 3 மாதத்தில் மட்டும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சம் பேர் வேலையற்றவர்களாக மாறி உள்ளனர் என்று சி.எம்.ஐ.இ. அறிக்கை தெரிவித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications