கேரளா.. ஒரு பக்கம் அதிகரிக்கும் தொற்று.. மறுபக்கம் தடுப்பூசியில் நாட்டிலேயே லீடிங்.. என்ன நடக்கிறது?
கேரளாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது
டெல்லி: கேரளாவில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் அதேசமயம், தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அந்த மாநிலம் மற்றவர்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. இதுதான் பெரும் குழப்பமாக இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று குறையவே இல்லை.. மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது...
12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்தியா
கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. கடந்த வாரம், கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் கிட்டத்தட்ட பாதி சதவீதம் அதாவது 49.85 சதவீதம் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

பாதிப்புகள்
நாடு முழுவதும் 16,49, 295 டெஸ்ட்கள் எடுக்கப்பட்டுள்ளன.. தினசரி பாதிப்பு விகிதமானது 1.85 சதவீதம் என்றும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.39 சதவீதம் என்றும் கூறப்படுகிறது.. நேற்று மட்டும் பாதிப்புக்குள்ளான 30,549 பேரில், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என்ற இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே 77.4 சதவீதத்தினர் ஆவார்கள்.

உயிரிழப்பு
இதில், தினசரி பாதிப்பில் கேரளா மாநிலத்தவர்கள் மட்டுமே கிட்டத்தட்ட 46 சதவீதம் ஆகும் என்பதுதான் அதிர்ச்சி தகவலே. நேற்று, மகாராஷ்டிராவில் 90 பேர் இறந்த நிலையில், கேரளாவில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் இறப்புவிகிதம் 1.34 சதவீதமாக இன்னமும் தொடர்ந்து வருகிறது.. பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில், சமீப காலமாகவே 1,000 க்கும் குறைவான கேஸ்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.. டெல்லியில் இப்போது 568 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது.

கேரளா
தொற்று பாதிப்பில் அதிக எண்ணிக்கையில் கேரள மாநிலம் இருந்தாலும், தடுப்பூசி போடுவதில், மற்றவர்களை விட கேரளாதான் முன்னணியில் உள்ளதாம்.. இங்குள்ள மக்கள்தொகையில் 23 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. இதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 21 சதவிகிதமும், ராஜஸ்தானில் 15 சதவிகிதமும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கேஸ்கள்
இந்தியாவில் 2.55 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன.. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.. முந்தைய வாரத்தில் 38,148 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், இந்த வாரம் சராசரியாக 40,671 க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளன.
Recommended Video

இறப்பு விகிதம்
ஆனால், இறப்பு விகிதம் குறைந்துள்ளதாம்.. தினசரி இறப்புகள் 980-லிருந்து 544-ஆக குறைந்துள்ளது.. கடந்த வாரம் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 6,485 ஆக இருந்த நிலையில், இப்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்து 3,391 ஆக உள்ளது.. கேரளாவில் மட்டும் கடந்த வாரத்தில் தினசரி 115 உயிரிழப்புகள் ஏற்பட்டது.. ஆனால், இந்த வாரம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
ரயில் டிக்கெட் புக்கிங்.. வருகிறது மிக பெரிய கேம் சேஞ்சர் மாற்றம்! இனி ஒரே நொடியில் எல்லாமே முடியும் -
“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்! -
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்? -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
துபாய்க்கு போகும் விமானங்கள் ரத்து.. இண்டிகோ நிறுவனம் கொடுத்த முக்கிய மெசேஜ்! -
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications