இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை.. வெளியே எங்கும் செல்ல முடியாது.. மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுக்க அனைத்து மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுக்க அனைத்து மண்டலங்களிலும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளிலும் கூட இரவு 7 மணிக்கு பின்பும் காலை 7 மணிக்கு முன்பும் மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாது. மருத்துவ தேவை போன்ற மிக அவசர தேவை இருந்தால் மட்டுமே இந்த நேரத்தில் மக்கள் வெளியே செல்ல முடியும். இங்கு சூழ்நிலையை பொறுத்து உள்ளூர் நிர்வாகம் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதாவது 144 தடை உத்தரவு, கடுமையான இரவு நேர ஊரடங்கு போன்ற விதிகளை உள்ளூர் நிர்வாகம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
அதேபோல் 65 வயது நிரம்பிய நபர்கள், ஏற்கனவே உடலில் நோய்கள், குறைபாடுகள் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ தேவை இன்றி வேறு காரணங்களுக்கு வெளியே செல்ல கூடாது. எந்த விதமான சோன் வேறுபாடும் இன்றி அனைத்து சோன்களிலும் மருத்துவமனைகள் இயங்கும்.












Click it and Unblock the Notifications