கொரோனா ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பிய பாகிஸ்தான்.. எழும் கண்டனங்கள்!
கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சார்க் ஆலோசனையில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சார்க் ஆலோசனையில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் நாடுகள் பெரும் பதற்றத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகமாக மகாராஷ்டிராவில் இந்த வைரஸ் காரணமாக 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்தது. பிரதமர் மோடியின் பெயரில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கொரோனா தொடர்பாக இந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டது.
இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து ஆலோசனை செய்தது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து பேசியது.
கொரோனா குறித்த ஆக்கபூர்வமான விஷயங்களை இந்த நாடுகள் விவாதம் செய்தது. ஆனால் பாகிஸ்தான், இந்த சார்க் மேடையை கூட காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசுவதற்காக பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு துணை அதிகாரி ஷாபர் மிர்ஸா இதில் கலந்து கொண்டு பேசினார், அதில் இந்த வைரசுக்கு எதிராக நாம் துரிதமாக செய்லபட வேண்டும்.
இந்த வைரஸ் வேகம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் 33 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்து என்பதை நாம் உணர வேண்டும். சார்க் அமைப்பு மூலம் திட்டங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அறிவியல் தொடர்பான அறிவிப்புகள், தேசிய பாதுகாப்பு திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கொரோனாவின் தீவிரத்தை இந்தியா உணர வேண்டும். இதனால் காஷ்மீரில் செய்யப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளை இந்தியா நீக்க வேண்டும். அங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு, கொரோனா சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆனால் கொரோனா தொடர்பான ஒரு ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் பேசியது பெரிய எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. பிரதமர் மோடி இதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த செயலை சார்க் நாடுகள் எதிர்த்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications