இந்தியாவில் லாக்டவுனா? விரைவில் புதிய கட்டுப்பாடுகளா? இன்று பிரதமர் மோடி மிக முக்கிய ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இதனால் இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் இதுவரை ஓமிக்ரான் கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், லாக்டவுன் குறித்தும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.

இந்தியா ஓமிக்ரான்
கொரோனா பரவல் தொடர்பாக உயர் அதிகாரிகள், சுகாதார செயலாளர்களுடன் மோடி பேச உள்ளார். மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் எந்த அளவில் இருக்கிறது, எந்தெந்த மாநிலங்களில் கேஸ்கள் அதிகம் இருக்கிறது என்று அவர் பிரதமர் மோடிக்கு விளக்குவார்.

ஓமிக்ரான் பிரதமர் மோடி
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் போடப்பட்ட வேக்சின் அளவு, அதேபோல் பூஸ்டர் தேவையா என்பது குறித்து இவர் பிரதமருக்கு விளக்கம் அளிப்பார். இன்னும் பல மருத்துவத்துறை நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் .

பிரதமர் மோடி லாக்டவுன்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் வந்துள்ளன. அதேபோல் தேவைப்படும் பட்சத்தில் இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Recommended Video

இந்தியா லாக்டவுன்
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பின்பாக இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். இரவு நேர லாக்டவுன், சில பொது இடங்களுக்கு செல்ல தடை, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. முழு அளவில் லாக்டவுன் அறிவிப்பு வர வாய்ப்பு குறைவு என்றாலும் மாநில வாரியாக நிறைய கட்டுப்பாடுகள் வரும் என்று கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications