இந்தியாவில் விரைவில் 2-12 வயது குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின்.. என்ன வேக்சின் போடப்படும் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் விரைவில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் வேக்சினை குழந்தைகளுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 187 கோடி டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 84 கோடி பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. 1,08,10,37,807 பேர் இதுவரை வேக்சின் தளத்தில் ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.

இந்தியா மாஸ்க்
இந்த நிலையில்தான் இந்தியாவில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வேக்சின் போட வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மூலம் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி 2-12 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் வேக்சின் போட்டு நடத்தப்பட்ட சோதனை டேட்டா விவரங்கள் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை
இந்த டேட்டா குறித்த ஆலோசனை நேற்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பயோ - கோர்போவாக்ஸ் வேக்சினை 5-12 வயது குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் இதில் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான டேட்டா விவரங்களும் நேற்று ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் 25ம் தேதி 12-18 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

கோவாக்சின்
அதன்படி தற்போது 15-18 வயது குழந்தைகளுக்கு கோவாக்சின் வழங்கப்பட்டு வருகிறது. 12-14 வயது குழந்தைகளுக்கு பயோ இ கோர்போவேக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 வயது குழந்தைகளுக்கும் கோவாக்சின் போடும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. வல்லுனர் குழு பரிந்துரையை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் விரைவில் கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2380 கொரோனா கேஸ்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக இந்தியாவில் 4,30,49,974 கேஸ்கள் பதிவாகி உள்ளன. ஆக்டிவ் கேஸ்கள் 13,433 ஆக உள்ளது. பாசிட்டிவிட்டி சதவிகிதம் 0.53% ஆக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாஸ்க் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications