குழந்தை காலில் புண் வருதா.. தோல் நிறம் மாறுதா.. கொப்புளமா இருக்கா.. கொரோனா வைரஸாகவும் இருக்கலாமாம்!
டெல்லி: குழந்தைகளின் கால்விரல்களில் புண்ணாதல், தோலின் நிறம் மாறுதல், கொப்புளம் போல் போடுதல் உள்ளிட்டவை இருந்தால் அது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என வெளிநாட்டு தோல்நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல், சளி, மூச்சு திணறல் உள்ளிட்டவை சொல்லப்பட்டு வந்தது. பெரும்பாலான இடங்களில் பச்சிளம் குழந்தைகளும் இந்த நோய்க்கு இரையாகினர்.
பெரியவர்களையும் அதிகமாக தாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் குழந்தைகளின் கால்களில் மருத்துவர்கள் ஒரு வித்தியாசத்தை கண்டனர்.

தோல்நோய் நிபுணர்கள்
அதாவது கால்களின் விரல்கள், விரல் இடுக்குகளில் புண்ணாதல், கொப்புளம் போல் வருதல், அந்த தோலின் நிறம் மாறுதல் போன்றவற்றை பார்த்தனர். இது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தோல்நோய் நிபுணர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்தாலி
இது போல் கால்விரல்களில் ஒரு வித அழற்சியானது துருவ பகுதிகளில் உள்ள மக்களிடையே ஏற்படும். பனிக்கட்டியால் கால்களில் ரத்த நாளங்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். கால்விரல்களில் கடுமையான தசைப்பிடிப்புகளும் ஏற்படுகிறது. ஆனால் தற்போது இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த புதிய அறிகுறிக்கு மருத்துவர்கள் கோவிட் டோஸ் (Covd toes) என பெயரிட்டுள்ளனர். இது போன்ற அறிகுறியை கோவிட் 19 அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள குழந்தைகளிடம் மருத்துவர்கள் அதிகம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கா
இது போன்ற புதிய அறிகுறி அமெரிக்காவின் பாஸ்டன் உள்ளிட்ட இடங்களில் காணப்படுகிறது. இது போன்ற அறிகுறிகளுடன் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. இத்தாலியில் உள்ள குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற முன்பு கூறப்பட்ட கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கால்விரல்களில் ஒருவித அழற்சி காணப்படுகிறது.

வித்தியாசம்
இதுதொடர்பாக மருத்துவர்களும், தோல்நோய் மருத்துவர்களும் விவாதித்து வருகிறார்கள். உலக நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை கண்டுபிடிப்பது அவர்களுக்கு மிகப் பெரிய சவால் இருந்து வருகிறது. பொதுவாக வறட்டு இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், உடல் அசதி, மூச்சு திணறல் உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஆனால் திடீரென சுவை அறியாமல் போவது, வாசனை அறியாமல் போவது, கண்களில் பிங்க் நிறம் ஏற்படுவது போன்றவை கொரோனாவின் வித்தியமாசமான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications