கோவிட் வாரியர்ஸ்.. கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க புதிய இணைய பக்கம்.. மோடி அறிவிப்பு!
மத்திய அரசு சார்பாக http://covidwarriors.gov.in என்ற இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய அரசு சார்பாக http://covidwarriors.gov.in என்ற இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,384 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுக்க 826 பேர் இந்த கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

என்ன சொன்னார் மோடி
பிரதமர் மோடி தனது பேச்சில், தேசத்தில் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது என்பதை விவசாயிகள் உறுதி செய்துள்ளனர். இரவு பகல் பாராமல் விவசாயிகள் உழைத்து வருகிறார்கள். நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வது விவசாயிகள் மட்டும்தான். அதேபோல் இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களிடம் வாடகை கூட வாங்குவது இல்லை. பலர் தங்களுக்கு பென்ஷன் வேண்டாம் என்று தியாகம் செய்து உள்ளனர்.

கடும் உழைப்பு
கொரோனா தடுப்பிற்காக மக்கள் இப்படி ஆர்வமாக பணிகளை செய்கிறார்கள். நாட்டு மக்கள் தங்களால் ஆன பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரர்களை போல போராடுகிறார்கள் அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது

வறுமைக்கு எதிராக
நாம் கொரோனாவோடு சேர்த்து வறுமைக்கு எதிராகவும் போராடி வருகிரம் அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள். மக்கள் இந்த கொரோனா தடுப்பு பணிகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்து உள்ளனர். http://covidwarriors.gov.in இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இணைய பக்கம்
இதில் கொரோனா தொடர்பான அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கொரோனா தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இதில் தீர்வு பெற முடியும். இந்த தளம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.நாடு முழுக்க உள்ள 130 கோடி மக்களையும் நான் மதிக்கிறேன். அவர்களின் பணிகளை, தியாகத்தை நான் தலை வணங்குகிறேன் , என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications