கஜா புயல் பாதிப்பு.. இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிச்சாமி
பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
Recommended Video

புதுடெல்லி: கஜா புயல் பாதிப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசுகிறார்.
கஜா புயல் போய் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. டெல்டா மாவட்ட மக்கள் இன்னமும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏராளமாக ஆகிவிட்டது.
தமிழக அரசு சார்பில் புயலால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு சம்பந்தமாக முதல்வர் 2 முறை ஆலோசனை கூட்டத்திலும் அதிகாரிகளுடன் ஈடுபட்டார். மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வும் மேற் கொண்டார்.

கணக்கிடும் பணிகள்
இதைதவிர, எந்தெந்த மாவட்டங்களில் புயலால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கணக்கிடும் பணிகள் அரசு சார்பாக முடுக்கி விடப்பட்டது. அதனடிப்படையில், புயல் அடித்த மறுநாளே சேத மதிப்பீடு கணக்கெடுக்கும் பணிகளும் நடந்தன.

டெல்லி புறப்பட்டார்
இந்த சேத மதிப்பீட்டு அறிக்கை தயாரானதும் அதை எடுத்து கொண்டு நேற்று மாலை முதல்வர் டெல்லி சென்றார். அங்கு தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் தங்கியிருந்தாலும், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக எம்பிக்களுடன் திரும்பவும் ஆலோசனை நடத்தினார்.

நிவாரண நிதியுதவி
இதனையடுத்து இன்று காலை பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளார். அப்போது சேத மதிப்பீட்டு அறிக்கையை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தர உள்ளார். பின்னர், கஜா புயல் நிவாரண நிதியும் கோரவுள்ளார்.

ரூ.13 ஆயிரம் கோடி
உடனடி நிதியாக மத்திய அரசிடம் ரூ.13 ஆயிரம் கோடி கேட்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புயலால் பாதிக்கக்கப்பட்ட இடங்களை ஆய்வு நடத்த மத்தியக் குழு ஒன்றினையும் தமிழகத்திற்கு அனுப்புமாறு பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications