20 ஆண்டுகளில் 40 முறை பந்தாடப்பட்ட ரூபா ஐபிஎஸ்.. உமா பாரதி முதல் சசிகலா வரை அதிரடி காட்டியவர்!
டெல்லி: சசிகலாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து உண்மையை வெளியே கொண்டு வந்த ரூபா ஐபிஎஸ் தனது 20 ஆண்டு பணிகாலத்தில் 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்க டிஜிபி சத்தியநாராயண ராவிற்கு ரூ 2 கோடி லஞ்சம் பேசப்பட்டதாக மர்ம முடிச்சுகளை ரூபா ஐபிஎஸ் அவிழ்த்தார்.
இதையடுத்து கர்நாடக சிறைத் துறையின் முதல் பெண் போலீஸ் அதிகாரியான இவர் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

ஐபிஎஸ் அதிகாரி
இதையடுத்து அவர் கர்நாடகத்தின் முதல் பெண் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் நிம்பால்கர் மீது ஊழல் புகாரை முன் வைத்தார். இவர் உள் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் பெங்களூரில் கூடுதல் ஆணையராக பதவி வகித்தார்.

ரூ 619 கோடி
அப்போது நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ 619 கோடியை முறைகேடு செய்ததாக நிம்பால்கர் மீது ரூபா அதிரடியாக குற்றம்சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. இந்த நிலையில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கர்நாடகா கைவினை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ரூபா அதிரடியாக மாற்றப்பட்டார்.

இரண்டு மடங்கு
இதுகுறித்து ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனது பணிக்காலத்தை விட இரண்டு மடங்கு நான் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். உண்மைகளை வெளிக்கொணர்வதால் இந்த நடவடிக்கைகள் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து நான் எனது பணியை சமரமின்றி செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

கைது
கர்நாடகாவின் பின் தங்கிய மாவட்டமான யாதவகிரியில் முதல்முறையாக ரூபா பணி நியமனம் செய்யப்பட்டார். 20 ஆண்டுகளில் அவர் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள வட கர்நாடகாவிலும் பணியாற்றியுள்ளார். இது அரசு ஊழியர்களுக்கு தண்டனை பகுதியாக கருதப்படுகிறது. 2004-ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருக்கும் உமா பாரதியை சர்ச்சைக்குரிய உப்பள்ளியில் ஈத்கா மைதானத்தில் கொடி ஏற்ற முயற்சித்த போது அவரை துணிந்து கைது செய்தார் ரூபா.

பந்தாடப்படும் ரூபா
அது போல் மற்றொரு மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏவை கைது செய்து சிறையில் அடைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேர்மையான அதிகாரிகள் வளைந்து கொடுக்காவிட்டால் பந்தாடப்படுவர் என ரூபா தெரிவித்திருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications