Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமனாரின் அறைக்கு தீ வைத்த மருமகள்.. தீயை பற்ற வைத்து படுக்கையில் வீசிய நிலையில்.. நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாமனார் படுத்துக் கொண்டிருந்த அறைக்கு தீ வைத்துள்ளார் மருமகள் ஒருவர்.. இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.என்ன காரணத்திற்காக இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. வடமாநிலத்த்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதன் உண்மை தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது.

ட்விட்டரில் வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில், ஒரு பெண் தனது மாமனாரின் அறைக்கு கையில் காகிதத்துடன் செல்கிறார்.பின்னர் திடிரென காகிதத்தை பற்ற வைத்து அதனை தூங்கிக்கொண்டிருக்கும் மாமானாரின் படுக்கையின் மீது வீசுவதாக வீடியோ உள்ளது. அந்த பெண்ணின் கணவன் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் முதியவரின் படுக்கையில் எரியும் காகிதத்தை அணைக்க அவசரமாக அவர் ஓடுவதும் பின்னர் தீயை அணைப்பதும் தெரிகிறது.

daughter-in-law Tries to Set Father-in-laws Room on Fire, Video on Online

மாமனாருக்கு எதிராக மருமகள் இவ்வளவு ஆவேசமாக ஏன் நடந்து கொண்டார் என்பதற்கு சரியான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. பல ஆங்கில ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், என்ன நடந்தது என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

இதனிடைமேய சமூக வலைதளமான "எக்ஸ்' இல் வீடியோவை வெளியிட்ட நபர், அந்த பதிவில், "மாமானார் அறைக்கு அந்த பெண் தீ வைக்க விரக்தியில் இருந்தது தான் காரணம் என்று கூறியுள்ளர் . தன் குழந்தைக்கு உணவளிக்க அந்த பெண் விரும்பி உள்ளார். ஆனால் குழந்தை தூக்கத்தில் இருந்தது. இதனால் குழந்தையை தொடர்ந்து தூங்க அனுமதிக்குமாறு மாமனார் வலியுறுத்தி உள்ளார். தனது குழந்தைக்கு உணவளிப்பதை மாமானர் விரும்பவில்லை என்பதால் விரக்தி அடைந்த பெண், கோபத்தில் மாமனாரின் அறைக்கு தீ வைக்க முயன்றுள்ளார்.

மருமகளின் இந்த திடீரென செயலார் அதிர்ச்சி அடைந்து கண் திறக்கிறார் முதியவர்.இதனிடையே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபர், தனது தந்தையின் படுக்கையில் எரிவதை உடனே ஓடிச்சென்று அணைக்கிறார். அத்துடன் தனது மனைவியையும் கடுமையாக கண்டிக்கிறார். அந்த பெண் இந்தியில் ஏதோ பேசுவதும், அதன்பின்னர் சாப்பிட அனுமதிக்கவில்லை என்றால், இந்த கதி அவருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார். இப்படியாக வீடியோ முடிகிறது.

அண்மையில், உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், 65 வயது முதியவர், தேநீர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஏற்பட்ட தகராறில், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். டீ தாமதமானதால் அவத் கிஷோர் என்ற அந்த முதியவருக்கும், அவரது மகள் மற்றும் மருமகனுடன் சண்டைபோட்டு இப்படி செய்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+