அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு குறி வைக்கும் தாவூத் இப்ராஹிம்.. என்ஏஐ விசாரணையில் ‛திடுக்’
டெல்லி: இந்தியாவில் டெல்லி, மும்பை உள்பட பல இடங்களில் அரசியல் தலைவர்கள், தொழில்அதிபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சதித்திட்டம் தீட்டி குழுவை ஏற்படுத்தி உள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். இவருடன் தொடர்பில் உள்ளவர்களை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் பஞ்சாப்பில் தாவூத்தின் சட்ட விரோத செயல்களை அரங்கேற்றிய நிறுவனம் கண்டறியப்பட்டது. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி அபுபக்கர் 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை சோதனை
தாவூத் இப்ராஹிம் விஷயத்தில் தொடர்ந்து கைது, கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் இக்பால் காஸர், மறைந்த சகோதரி ஹசீனா, கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்பின் இக்பால் காஸரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

சகோதரர் கைது
ஏற்கனவே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2017 ல் கைது செய்யப்பட்டு தானே சிறையில் இருந்த அவரை கோர்ட்டு அனுமதி பெற்று அமலாக்கத்துறையினர் மீண்டும் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதலுக்கு திட்டம்
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் டெல்லி, மும்பை உள்பட பல இடங்களில் பிரபல அரசியல் தலைவர்கள், தொழில்அதிபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக சிறப்பு குழுவை ஏற்படுத்தி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

வன்முறை
மேலும் இந்த சதிக்கார குழுவினர் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கொண்டு தாக்குதல் நடத்தி, நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக மும்பை, டெல்லியை இலக்காக நிர்ணயித்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் இக்குழுவில் உள்ளவர்களுக்கு ஹவாலா முறையில் தாவூத் இப்ராஹிம் பணம் அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications