Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டேய்.. உக்கார்றா.. பார்த்துகிட்டே இருக்கேன்.. தொந்தரவு செய்த பாஜக எம்பியை.. திட்டிய தயாநிதி மாறன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்பி ஒருவரை திமுக எம்பி தயாநிதி மாறன் கோபமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் இன்று சந்திரயான் 3 தொடங்கி பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ராஜ்ய சபாவில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் சட்ட மசோதா மீதான விவாதம் நடந்தது.

Dayanidhi Maran MP got angry and shouted at an BJP MP for interrupting MP A Raja

நேற்று லோக்சபாவில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் சட்ட மசோதா விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. நேற்று நாடாளுமன்றத்தில் கனிமொழி அனல் பறக்க இந்த மசோதா பற்றி பேசினார்.

அவர் தனது பேச்சில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ரகசியமாகக் கொண்டு வந்துள்ளார்கள்; எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் ஆலோசிக்கவில்லை. 1996ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் இவ்வளவு கால தாமதம்?

எப்போது மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும்?. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதில் இவ்வளவு ரகசியம் காட்டியது ஏன்? மகளிரை எம்எல்ஏ ஆக்குவது போல அவர்களை தேர்வு செய்யும் உரிமை மகளிருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வர பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

Dayanidhi Maran MP got angry and shouted at an BJP MP for interrupting MP A Raja

பெண்களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்திற்காக பாடுபடுகிறோம் என்ற ஆண்களின் பேச்சுகள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே என பெரியார் கூறியதை நினைவுபடுத்துகிறேன். உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு. இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான். பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை.

ஜெயலலிதா வலிமைவாய்ந்த தலைவர்தான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதி கூறியதுதான் இங்கே நினைவிற்கு வருகிறது. தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனைகளை கொண்டுள்ளது, என்றார்.

மசோதா இடைஞ்சல்: இந்த மசோதா மீது பேசும் போது கனிமொழிக்கு பாஜக எம்பிக்கள் கடுமையான இடைஞ்சல் கொடுத்தனர். அவர்களை தடுத்த கனிமொழி.. நீங்க என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். எனக்கு புரியாது என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.

அதேபோல் இன்று ஆ. ராசா பேசிய போதும் பாஜக எம்பிக்கள் அவரை பேச விடாமல் லோக்சபாவில் தொல்லை செய்தனர். இன்று ஆ. ராசா பேசுகையில், சந்திரயான் திட்டத்தில் திட்ட இயக்குனர்களாக பணியாற்றிய அனைவரும் தமிழர்கள். அதோடு சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தின்போது இருந்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் என அனைவரும் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள்.

சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அளப்பரியது. இதனால் கர்வத்தோடு நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள். இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது. சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும்.

பாதுகாப்பு துறை அமைச்சர் சமஸ்கிருதத்தில் விஞ்ஞான கருத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் எங்களின் தமிழ் புலவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறார்கள். திருவள்ளூவர் ‛சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என தெரிவித்துள்ளார்.

அப்போது பாஜக எம்பி ஒருவர் அவரை பேச விடாமல் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டார். இதனால் ராசா பேச்சு தடைபட்டது. இதனால் கோபம் அடைந்த தயாநிதி மாறன் எம்பி.. அந்த பாஜக எம்பியை நோக்கி விரலை காட்டி.. டேய்.. உக்கார்றா.. பார்த்துகிட்டே இருக்கேன்.. தொந்தரவு பண்ணிகிட்டே இருக்கே.. என்று கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தார். அவரின் இந்த நடவடிக்கை அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+