குடியுரிமை சட்டம்.. பரவிய போராட்டம், வன்முறை.. உ.பி.யில் பலியானோர் எண்ணிக்கை 12ஐ தாண்டியது
டெல்லி: குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பான, போராட்டங்கள் வன்முறையில், இதுவரை உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. ஆனால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் வன்முறை மற்றும் போராட்டங்களின்போது பலியானோர் எண்ணிக்கையை சேர்த்தால், அது 12ஐ தொட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

மீரட் மாவட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் 8 வயது சிறுவன் வாரணாசியில் ஏற்பட்ட போராட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், மாநிலத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கோரக்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பேணுவதற்கு காவல்துறையினர் இங்கு ஐபிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவுகளை விதித்துள்ளனர். இது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications