Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு.. அருமை நண்பர் என வேதனையை பகிர்ந்த பிரதமர் மோடி, மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் வேதனையளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Japan-ல் என்ன நடந்தது? Shinzo Abe சுடப்பட்டது எப்படி? Former Prime Minister-க்கே இப்படியா | *World

    ஜப்பானில் பிரதமாராக இருந்தவர் ஷின்சோ அபே. இவர் தனது பிரதமர் பதவியை 2020ல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். உடல்நலக்குறைவு காரணமாக இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இவர் பதவியில் இருந்தபோது இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு மேம்பட்டு இருந்தது. பிற நாடுகளை காட்டிலும் ஷின்சோ அபே இந்தியாவுடன் நல்ல உறவு வைத்திருந்தார்.

    ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு

    ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு

    இந்நிலையில் ஜப்பானில் உள்ள நாரா என்ற பகுதியில் மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேயின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஒருவர் கைது- தீவிர விசாரணை

    ஒருவர் கைது- தீவிர விசாரணை

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் தான் ஷின்சோ அபே எதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டார் என்ற காரணம் தெரியவரும். இந்நிலையில் ஷின்சோ அபே மீதான தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனத்தோடு, வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

    பிரதமர் நரேந்திர மோடி டுவிட்

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷின்சோ அபே மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி, ‛‛எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். அவருக்காவும், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

    மன்மோகன் சிங் வருத்தம்

    மன்மோகன் சிங் வருத்தம்

    இதுபற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், "எனது நண்பரான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதலை அதிர்ச்சியடைந்துள்ளேன். அவருக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்'' என கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி கூறியது என்ன?

    ராகுல்காந்தி கூறியது என்ன?

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியும், ஷின்சோ அபே மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை ஆழப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர் தான் பிரதமர் ஷின்சோ அபே. இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+