பாதுகாப்புத் துறை அமைச்சரின் முதல் பயணம்... சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்
டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றவுடன் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலைக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது ராணுவ தளபதி பிபின் ராவத்தும் உடன் செல்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் ராணுவ அமைச்சகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். இதற்காக ரைசினா ஹில்சில் உள்ள ராணுவ அமைச்சகத்துக்கு வந்த ராஜ்நாத் சிங்கை முப்படை தளபதிகள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

முன்னதாக, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு சென்று உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற பின், ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதில் ராணுவத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, தங்கள் துறை சந்திக்கும் சவால்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டு முறைகள் குறித்து ஒவ்வொரு தளபதியும் தனித்தனியாக அறிக்கை அளிக்குமாறு முப்படை தளபதிகளை ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இதைப்போல ராணுவ அமைச்சகத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் தங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க அவர் அறிவுறுத்தினார்.
சீனாவுடனான எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதும் ராஜ்நாத் சிங்குக்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என கருதப்படுகிறது. ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், இந்த பணிகளை முன்னெடுத்து செல்வதிலும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் பாதுகாப்பு வல்லுனர்களின் எதிர்பார்ப்பாகும்.
புல்வாமா தாக்குதலுக்கு, தக்க பதிலடி கொடுக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ராணுவம் வாலாட்டுவதை நிறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், எதிர்க்காலத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை இந்தியா மேற்கொள்ள போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications